மூன்று வாரங்களில் 1,675 பேர் சிக்கினர்!

மூன்று வாரங்களில் 1,675 பேர் சிக்கினர்!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய ஆயிரத்து 675 பேர் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று தெரிவித்தார்.அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியைப் பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.