168 பேரைப் பலியெடுத்த ‘கொரோனா 3ஆம் அலை’.

168 பேரைப் பலியெடுத்த ‘கொரோனா 3ஆம் அலை’ 115 பேர் வயோதிபர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை மூலம் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்று வரை 168 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 115 பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 – 30 வயதுக்கிடைப்பட்ட மூவரும், 31- 40 வயதுக்கிடைப்பட்ட ஐவரும், 41 – 50 வயதுக்கிடைப்பட்ட 18 பேரும், 51 – 60 வயதுக்கிடைப்பட்ட 26 பேரும், 61 – 70 வயதுக்கிடைப்பட்ட 33 பேரும், 71 வயதுக்கு மேற்பட்ட 82 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை மூலம் நேற்றிரவு வரை  33 ஆயிரத்து 950 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 274 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.