திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு ரஜனி காந்த் மாலை வந்தடைந்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் உடன் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுனமூர்த்தி சந்தித்து பேசினர்.

மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பிய நிலையில் உடல்நலம் குறித்து இருவரும் விசாரித்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன் பேசியதாவது; திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

கட்சியின் பெயர், சின்னம், கொடி குறித்த அறிவிப்பை ட்விட்டர் வாயிலாக வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தே கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.