பத்து அத்தியாவசிய உணவுகளுக்கு பிப்ரவரி முதல் நிலையான விலைகள்

வர்த்தக அமைச்சகம் பிப்ரவரி முதல் பத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிலையான விலையை அறிவிக்கவுள்ளது.

அரிசி, மாவு, சர்க்கரை, பருப்பு, டின் மீன், ஸ்ப்ராட், வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டை மற்றும் கோழி இறச்சி போன்ற பத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிலையான விலையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களிடமிருந்து ஏலம் கேட்கும் டென்டர் விளம்பரம் இந்த மாதம் வெளியிடப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (02) மிஹின்தளயில் வைத்து தெரிவித்தார், அதன்படி வர்த்தக அமைச்சகம் உயர்தர பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.