ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 30 பேருக்குக் கொரோனா!

ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 30 பேருக்குக் கொரோனா!

ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் விசேட அதிரடிப்படையை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறாகத் தொற்றுக்கு உள்ளாகியுள்ள விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் கந்தக்காடு, புனானை, களுத்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள பொலிஸ் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.