வவுனியா செட்டிகுளம் இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றுறுதி.

வவுனியா செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இராணுவ வீரர் காலி பலப்பிட்டியவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு விடுமுறையில் சென்றுவிட்டு கடந்த 31 ஆம் திகதி மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு கடமைக்கு திரும்பியிருந்தார். இதன்போது அவர் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.