வவுனியாவில் மேலும் 24 பேருக்கு கொரணா தொற்று.

வவுனியாவில் 24 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.  அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது.

அதனடிப்படையில் வவுனியாவின் நகரப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களை சேர்ந்தவர்களுடன் தொடர்புகளை பேணிய 24 பேருக்கு தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டது.

வெளிக்குளம், தெற்கிலுப்பைக்குளம், மகாறம்பைக்குளம் பட்டாணிசூர், வேப்பங்குளம், பட்டக்காடு கந்தசுவாமி கோவில்வீதி, ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களிற்கே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.