புதுக்குடியிருப்பு பகுதியில் கரடி தாக்குதலுக்கு இலக்காகிய விவசாயி.

புதுக்குடியிருப்பில் வயலுக்கு சென்ற விவசாயி கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் வயல் நிலத்துக்கு சென்ற விவசாயி மீது கரடி தாக்கியதில் கோம்பாவில் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை(வயது 39) படுகாயம் அடைந்த நிலையில் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயலை பார்வையிட நண்பர்களுடன் சென்ற நிலையில் குறித்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து நண்பர்களின் உதவியுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.