இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே ராஜினாமா செய்துள்ளார்.

கோவிட் தொற்றுநோயை இத்தாலிய அரசாங்கம் கையாண்டது தொடர்பான பிரச்சனைகளால் பல்வேறு கட்சிகள் பிளவுபடத் தொடங்கியுள்ள நெருக்கடியை அடுத்து பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.

இத்தாலியில் கோவிட் அச்சுறுத்தலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 85,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், ஒரு புதிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க திரு. கோன்டே செயல்படுவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கோன்டே இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மேடரெல்லாவை சந்திக்கவுள்ளார்.

ஒரு வலுவான அரசாங்கத்தை அமைப்பதற்கு இத்தாலிய ஜனாதிபதி திரு. கோண்டேவின் ஆதரவை நாடக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம், இத்தாலிய ஜனாதிபதி செனட்டில் பெரும்பான்மையை இழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.