இன்றும் 772 பேருக்கு கொரோனா தொற்று : 60 ஆயிரத்தைக் கடந்தது மொத்தப் பாதிப்பு

இலங்கையில் இன்றும் 772 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் ஆயிரத்து 520 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் ஒரே நாளில் கொரோனாத் தொற்றில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 52 ஆயிரத்து 566 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 ஆயிரத்து 838 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.