இலங்கைக்கான வத்திக்கான் திருப்பீடப் பிரதிநிதி மன்னாருக்கு விஜயம்.

இலங்கைக்கான வத்திக்கான் திருப்பீடப் பிரதிநிதி மன்னாருக்கு விஜயம்.

திருத்தந்தையின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி அதிமேதகு கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை அவர்கள் மன்னார் மறைமாவட்டத்திற்கு நேற்று 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வருகை தந்திருந்தார்.

‌மன்னார் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மடு அன்னையின் திருவுருவச் சிலைக்கு முன்பாக வருகை தந்த பிரதிநிதியை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. அ. விக்டர் சோசை அடிகளார், மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பங்குத்தந்தை அருட்பணி. ஞாணப்பபிரகாசம் அடிகளார், அருட்பணியாளர்கள், அருட்சகோதர சகோதரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டி மெல் மற்றும் மன்னார் நகரசபை முதல்வர் திரு.எஸ். ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் வரவேற்றனர்.

மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் விசேட நற்கருனை ஆசீர்வாதம் இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.