இதுவரை 73 சதவீத சேவையாளர்கள் மட்டுமே தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையில் மூன்றாம் நாளில் 2694 பேர் டோஸ் பெற்றுள்ளனர்.

இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாள்களில் வடக்கு மாகாணத்தில் 7221 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இது மொத்த உத்தியோகத்தர்கள் எண்ணிக்கையில் 73 சதவீதமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் 9944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர்.
இந்தப் பணியில் முதல் நாளான நேற்றுமுன்தினம் 2997 பேர் கோவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இது 30 சதவீதத்தினர் ஆகும்.

இரண்டாம் நாளான வடக்கு மாகாணத்தில் 1530 சுகாதார சேவையாளர்கள் கோவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.
மூன்றாம் நாளான வடக்கு மாகாணத்தில் 2694 பேர் கோவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 1388 பேரும் கிளிநொச்சியில் 370 பேரும் மன்னாரில் 332 பேரும் வவுனியாவில் 350 பேரும் முல்லைத்தீவில் 284 பேரும் இன்று கோவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றனர்.

இதுவரை 73 சதவீத சேவையாளர்கள் மட்டுமே தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.