இந்தியாவின் ஆதரவைக் கோரி மோடிக்கு இலங்கை அவசர கடிதம்.

இந்தியாவின் ஆதரவைக் கோரி
மோடிக்கு இலங்கை அவசர கடிதம்.

ஐக்கிய நாடுகள் உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த அமர்வில் தமக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை அரசு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான சில நாடுகள் கூட்டாகப் புதிய பிரேரணை கொண்டுவரவுள்ளன.

இந்தநிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடிதமொன்றின் ஊடாக மேற்படி கோரிக்கை இலங்கை அரசால் விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.