இவ்வாண்டு இறுதியில் வாகனங்களை மீள இறக்குமதி தொடர்பாக முடிவு.

வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் வருட இறுதியில் முடிவு.

வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவது குறித்து இவ்வாண்டு இறுதியில் பரிசீலிக்கப்படும் என இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வாகனங்களின் இறக்குமதி அந்நிய செலாவணி வீதங்களின் ஸ்திரத்தன்மைக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடை எதிர்காலத்தில் நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

Leave A Reply

Your email address will not be published.