ரயில் கடவையில் இராணுவ பஸ் – ரயில் மோதியதில் மூவர் காயம்.

களனி – வனவாசல ரயில் கடவையில் இராணுவ பஸ் ஒன்றை ரயில் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று (01) காலை 9.35 மணியளவில் இந்தச் சம்பவம்இடம்பெற்றுள்ளது.

களனி – வனவாசல ரயில் கடவைக்கு அருகில் கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சென்று கொண்டிருந்த ரயிலால் இராணுவத்தினரின் பஸ் மோதப்பட்டது. அதனையடுத்து இராணுவத்தினரின் பஸ் வீடு ஒன்றை மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் பஸ்ஸின் பின் புறம் சேதமடைந்துள்ளது. ரயிலின் இயந்திர பக்கத்திலுள்ள கண்ணாடிக்கும் சிறிதளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.