இலங்கைக்கு சீன வங்கியில் இருந்து 180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்!

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) தனது கோவிட் -19 அவசர மற்றும் நெருக்கடி நிலமையின் கீழ் இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ .3510 பில்லியன்) கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, பீஜிங்கில் AIIB துணைத் தலைவர் டி.ஜே.பாண்டியனுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, இலங்கையின் தூதுவர் பாலித கோஹனாவுக்கு இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சீன தூதரக செய்தித் தொடர்பாளர் லோ சோங் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாங்க் ஆப் சிலோன் மற்றும் மக்கள் வங்கி ஊடாக கடன் வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தேரா மற்றும் கருவூல செயலாளர் எஸ். ஆர்.ஆட்டிகல ஆகியோரிடம் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.