இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி.

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சிற்றூர்ந்து! இரண்டு பெண்கள் பலி

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் (A9) இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பக்குமூன பகுதியிலிருந்து அனுராதபுரத்திற்கு சுற்றுலா சென்ற ஹயஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஹயஸ் வாகனத்தில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.