கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையை ஒக்டோபர் நடத்துவதற்கு நடவடிக்கை.

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.