இம்மாத இறுதியில் டில்லி பறக்கின்றார் கோட்டா! – மோடியுடன் முக்கிய பேச்சு.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் எனவும், அவர் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

அல்கொய்தா, அபுசயாப் இயக்கங்களைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சமீப காலமாக இலங்கையைத் தங்கள் தளமாகப் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். அரபு நாடுகள் கிழக்கு, தெற்கு ஆபிரிக்க நாடுகள் ஆகியவற்றில் செயற்படும் இந்தப் பயங்கரவாதிகள் இலங்கையில் நடமாடுவது அதிகரித்துள்ளது.

மேலும், சர்வதேச போதை மருந்து கும்பலும் இலங்கையைப் போதைப்பொருட்கள் கடத்தும் மையமாக வைத்து இருக்க முயற்சிக்கின்றது.

இதை முறியடிக்க இலங்கையில் போதிய படை பலம், புலனாய்வு அமைப்புகள் இல்லை. இதற்கு இந்தியா போன்ற பெரிய நாடுகளுடைய உதவி இருந்தால்தான் முடியும். அதிலும் பக்கத்து நாடான இந்தியாவால்தான் இதற்கு உதவ முடியும்.

எனவே, இதற்கான ஒத்துழைப்பை வழங்கும்படி இந்தியாவிடம் கேட்டுக் கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ச இந்தியா வரவுள்ளார் – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.