ஒக்ஸ்ஃபோர்ட் எஸ்ட்றாஸனிகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்க விளைவாக சில மரணங்கள்..
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2021/04/18144810/20210418_144255.jpg)
ஒக்ஸ்ஃபோர்ட் எஸ்ட்றாஸனிகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்க விளைவாக இலங்கையில் சில மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை மருத்துவ ஆய்வுக் கூட ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவது சம்பந்தமாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
இதன் காரணமாக உலகில் பல நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் இது குறித்து இலங்கையும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.