கொடிகாமம் சந்தை உட்பட்ட நகர் வியாபார நிலையங்கள் மூடப்பட்டன.

தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வியாபாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொடிகாமம் சந்தை உட்பட்ட கொடிகாமத்தின் நகர் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

வியாபாரிகளுக்கு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . பீசிஆர் முடிவுகள் வெளிவந்த பின்னர் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று சுகாதார தரப்பினர் அருவிக்கு தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.