இலங்கையின் நிலைமை மோசம்! – ஜனவரி மாதம் முதல் இதுவரை 82,598 பேருக்குக் கொரோனா.

இலங்கையில் 2021 ஜனவரி மாதம் முதல் மே 12ஆம் திகதி (இன்று) காலை வரையில் 82 ஆயிரத்து 598 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஜனவரி மாதம் 20 ஆயிரத்து 696 பேரும், பெப்ரவரி மாதம் 19 ஆயிரத்து 85 பேரும், மார்ச் மாதம் 9 ஆயிரத்து 463 பேரும், ஏப்ரல் மாதம் 15 ஆயிரத்து 440 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர்.

அத்துடன் இம்மாதத்தில் மே 1 முதல் 11ஆம் திகதி காலை வரை 22 ஆயிரத்து 914 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.