மாஸ்க் அணியாத உல்லாசப் பிரயாணி ஒருவர் கைது.

பொத்துவில் பிரதானவீதியில் பகிரங்கமாக மாஸ்க் அணியாமல் உல்லாசப் பிரயாணி ஒருவர் சென்று கொண்டிருந்த வேளை சுகாதார பரிசோதகர்களினூடாக இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை பிரதான வீதியில் மாஸ்க் அணியாமல் சென்ற உல்லாசப் பிரயாணிக்கும் சுகாதார பரிசோதகர்களுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் ஏனைய பொதுச் சுகாதார பரிசோதகர்களினாலும் பொலிஸாரின் உதவியுடன் குறித்த பயணி தனிமைப் படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே வேளை பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிரான வழக்குத் தாக்கள் செய்யப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.