கேரளா கஞ்சா 5கிலோ 575கிராம் பேசாலை பொலிஸாரினால் கைப்பற்றல்.

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார்,காட்டாஸ்பத்திரி பேசாலை,பிரதேசத்தில் வைத்து கேரளா கஞ்சா 5கிலோ 575கிராம் பேசாலை பொலிஸாரினால் நேற்று (20)மாலை கைப்பற்றபட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி,மற்றும் பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பொ.ப.சோமயித்,பி.பொ.ப.இந்திக்க,உ.பொ.ப.விவேகாணந்,உ.பொ.ப.ஆனந்த தலைமையிலான அணியினரே மேற்படி கேரள கஞ்சாவினையும் அதனைத் தன்வசம் வைத்திருந்த காட்டாஸ்பத்திரி யைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரினையும் கைது செய்து உள்ளனர் கைப்பற்றப்பட்ட கஞ்சா,மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.