இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் வரும்…..

எதிர்வரும் வரும் 26 ஆம் திகதி ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 26ம் தேதி பவுர்ணமி நாளில் நிகழவுள்ளது.

பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம். ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது.

அதுவே பூமிக்கு மிக அருகில் வரும்போது, முழு நிலவாக (பவுர்ணமி) இருப்பின், ‘சூப்பர்மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, முழு நிலவு வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்தில் இருந்து ரத்தச்சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். பார்க்க முடியும் கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்தார்

ஆசியாவில் சில நாடுகள், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப்பெருங்கடல், அண்டார்டிகா பகுதியில் முழு சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவில் இந்தமுழு சந்திர கிரகணம் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும். அதுவும், அனைத்து பகுதிகளிலும் காணமுடியாது.

வரும், 26ம் தேதி, மதியம், 2:17 மணிக்கு ஆரம்பித்து, இரவு, 7:19 மணிக்கு முடிவடையும் இந்த இந்நிகழ்வு, மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும். தொலைநோக்கி, பைனாகுலர் பார்க்கலாம்.வானம் தெளிவாக இருந்தால் பார்வையாளர்கள் இரவு முழுவதும் ,நாம் காண முடியும். இந்தாண்டின் அடுத்த சந்திர கிரகணம் நவ., 19ம் திகதி நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.