பிரதமர் மஹிந்தவுடன் பாகிஸ்தான் தூதுவர் பேச்சு!

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச ஆகியோருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை- பாகிஸ்தான் இடையிலான கலாசார மற்றும் மத ரீதியான சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசின் வருடாந்த புலமைப்பரிசில் திட்டம் குறித்தும் தூதுவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.