யாஸ் புயல் வலுவிழந்தும் ஜார்க்கண்டை நோக்கி நகர்ந்த போதும் கடும் மழை.

ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட வங்கக்கடலை ஒட்டிய மாநிலங்களை உலுக்கியெடுத்த யாஸ் புயல் வலுவிழந்து ஜார்க்கண்டை நோக்கி நகர்ந்த போதும் கொல்கத்தாவில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதே போன்று ராஞ்சியிலும் பீகாரின் முசாபர்புர் நகரிலும் பலத்த காற்றுடன் கன மழை பொழிந்தது.சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்ததால் இய்லபு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் ,தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில் மாநில அரசுகள் மேற்கொண்டதால் உயிர்ச்சேதம் மிகக்குறைந்த அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.