சிலாபத்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஆழ்துளை குழாய்க் கிணறு.

அத்தியவிசயமான தேவையைக் கருத்திற் கொண்டு வை. எம். எம். ஏ பேரவையினால் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஆழ்துளை குழாய்க் கிணறு நீர் வழங்குதலுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு வை. எம். எம். ஏ. தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிலாபத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நீர் வழங்கலின் மூலம் பொலிஸார், அருகிலுள்ள குர்ஆன் மத்திரஸா பிள்ளைகள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு வருகை தரும் நபர்கள் அனைவருக்கும் நன்மையளிக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று விதிமுறைகளுக்கு அமைய இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.