சர்வதேச பாடசாலைகளுக்கு நிகராக அரச பாடசாலைகள் – கல்வி அமைச்சு தீர்மானம்

மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பதற்க்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்கு என நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நுகெகோட விஜயராம கல்லூரி ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் பாடசாலையாக மேம்படுத்தப்படவுள்ளது.

சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லும் பல மாணவர்கள் மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றமை தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.