ஐ.நா., பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் தெரிவு.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75-வது தலைவராக துர்மெனிஸ்தான் நாட்டின் வோல்கன் போஸ்கிர் உள்ளார்.

இவரது பதவிக்காலத்திற்கு பிறகு புதிய தலைவரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடந்தது. இதில் மாலத்தீவுகள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித், ஆப்கானிஸ்தான் வெளியுற அமைச்சர் ஜல்மய் ரசூல் என்பவரும் போட்டியிட்டனர்.

193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில் 191 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் அப்துல்லா ஷாகித்திற்கு 143 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து ஐ.நா. பொதுச்சபையின் 76-வது தலைவராக தெரிவு பெற்றார்.

எதிர்வரும் செப்டம்பரில் 76-வது பொதுச்சபை கூட்டம் நடக்கிறது அக்கூட்டத்தை ஷாகித் தொடக்கி வைப்பார்.

இந்தியா உட்பட உறுப்பினர் நாடுகளின் ஐ.நா., தூதர்கள் அப்துல்லா ஷாகிப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.