கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்., காரைநகர் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் ஊரி பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுகின்றது என அப்பகுதி கிராம சேவையாளருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த வீடு முற்றுகையிடப்பட்டது.

அதன்போது வீட்டின் அறை ஒன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றதைக் கண்டறிந்து, வீட்டில் இருந்தவரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைதுசெய்தனர்.

அத்துடன் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.