கொரோனா தொற்றாளர்களை ஏற்றிவந்த பஸ் மோதியதில் யாழில் விவசாயி பலி.

யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பஸ் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. மட்டுவில் சந்திரபுரத்தைச் சேர்ந்த வட்டன் வேலாயுதம் (வயது-70) என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார்.

தென்னிலங்கையிலிருந்து 5 பஸ்களில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த விவசாயி ஒருவரை பஸ் ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார். சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.