தெற்காசியாவிலேயே இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு! – அஜித் நிவாட் கப்ரால்.

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதும் அது தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த எரிபொருள் விலையாகவே உள்ளது என மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் அவர்,

“எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த பின்பும், தெற்காசியாவில் இலங்கை மிகக் குறைந்த எரிபொருள் விலையைக் கொண்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

ஜூன் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல வாதப் பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.