உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.

கொழும்பு: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையெழுத்திட்டனர்.

இதன்படி ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், எரிபொருள் விலையை அதிகரிக்க வலுசக்தி அமைச்சர், அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவில்லை என அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன் , அமைச்சர் உதய கம்மன்பில, அடிப்படை பொறுப்புக்களை மீறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ,உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மிக அதிகளவில் குறைவடைந்திருந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை எரிபொருளின் விலையை குறைக்காது, எரிபொருளின் விலையை அதிகளவிலேயே வைத்திருந்ததுடன், அதனால் பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபத்தை பாராளுமன்றத்திற்கும், மக்களுக்கும் தெளிவூட்டவில்லை எனவும் நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை உள்ளிட்ட 10 விடயங்களை மேற்கோள்காட்டி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.