நாலு பெண்ணுங்கள்!(நான்கு பெண்கள்!)

தகழி சிவசங்கர பிள்ளையின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு அடூர் கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய நாலு பெண்ணுங்கள்(நான்கு பெண்கள்) என்ற மலையாள திரைப்படம் 2007ல் வெளியானது. இப்படத்தில் பத்மபிரியா, கீது மோகன்தாஸ், மஞ்சு பிள்ளை, நந்திதா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தின் வெவ்வேறு காலகட்டங்களில்(1940 முதல் 1960 வரையிலான ஆண்டுகள்), கேரளா ஆலப்புழா குட்டநாட்டுப் பகுதி மற்றும் விவித சமூக அடுக்குகளைச் சேர்ந்த பெண்கள் வாழ்க்கையை பற்றிய கதையிது.

இந்த திரைப்படம், கதைக்கரு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை மற்றும் திரை நுட்பங்கள் சிறப்பாக ஒருங்கிணைந்து அழகிய பிரேம்களுடன் இத்திரைப்படம் பெண்மையின் பயணத்தை விவரிக்கிறது.

இசை தாமஸ் காட்டுகடப்பள்ளி, ஒளிப்பதிவு ராதா கிருஸ்ணன் எம்.ஜெ,  எடிட்டிங் பி. அஜிதகுமார், கலை மார்தாண்டம் ராஜசேகரன் செய்ட்துள்ளனர்.  55 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் அடூர் கோபாலகிருஷ்ணன் சிறந்த இயக்குநராகவும், பி. அஜித்குமார் சிறந்த எடிங்க் விருதையும் பெற்றார்.

முதல் கதை ‘ ஒரு சட்டத்தை மீறியதின் கதை!’


ஒருவனுக்கு மனைவியாக வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்யும் ஒரு தெரு விபச்சாரி குஞ்சிபென்னு (பத்மபிரியா) எதிர் கொள்ளும் பிரச்சினை தான் இதில்.  விபச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கும் போது கண்டிக்காத நீதிமன்றம், தன் காணவருடன் வாழும் போது விபசாரம்  குற்றம் என்ற பெயரில்  நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் காட்சியுடன் கதை முடிகிறது. இந்திய நீதி அமைப்பை கேலி பண்ணும் விதம் இக்கதை அமைந்திருந்தது.

கன்னி


குமாரி (கீது மோகன்தாஸ்)   ஒரு ஒரு ஏழைத் தொழிலாளி. தனது தகப்பன் சுகவீனமாக இருப்பதால் வீட்டை நடத்தும் பொறுப்பை மிகச் சிறிய வயதிலேயே ஏற்றுக் கொள்கிறார். இருப்பினும் மகள் கல்யாண வயதை எட்டுவதை தொடர்ந்து நாராயணன்(நந்து) என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர். நந்துவின் செய்லபாடுகள் வினோதமாக உள்ளது. மனைவியிடம் உரையாடக்கூட  விரும்புவதில்லை. நேரா நேரம் நல்ல சாப்பிட்டு விட்டு தனியாக தூங்கி விடுகிறார். சில காலம் கழிந்து  குமாரியை அவளது வீட்டில் கொண்டு விட்டு விட்டு திரும்ப அழைத்துச் செல்ல வரவேயில்லை. நாட்கள் செல்ல செல்ல, அவளுடைய குணம் சரியில்லாததால் தான் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றன.  கடைசியாக குமாரி, தனக்கும் நாராயணனுக்கும் திருமணம் நடக்கவில்லை என்று சொல்வதுடன் கதை முடிகிறது.

சின்னு அம்மா

குழந்தைகள் இல்லாத சின்னு (மஞ்சு பிள்ளை) தனது அன்பான கணவருடன்  மிகவும் திருப்திகரமான  வாழ்ந்து வருகிறார்.  நீண்ட காலத்திற்கு முன்பே தமிழகத்திற்கு ஓடி போன நாராயண பிள்ளை, தமிழகத்தில் மனைவி மக்களுடன் வசதியாக வாழ்ந்து வருகிறவர். சொந்த ஊர் வந்த நாராயணன் தனது பள்ளி தோழி சின்னுவை  அவள் வீட்டில் தனியாக இருக்கும் போது சந்திக்க வருகிறான்.  சின்னுவிற்கு குழந்தை இல்லை என அறிந்ததும்,தன்னால் சின்னுவிற்கு ஒரு குழந்தை தரும் என ஆசை வார்த்தை கூறுகிறான். குழந்தை இல்லை என்ற அத்தனை ஏக்கவும், வருத்தவும் இருந்தும் கணவருக்கு நம்பிக்கை துரோகம் செய்த தகாத உறவில் தனக்கு ஒரு குழந்தை தேவை இல்லை என்பதை முடிவெடுத்து மறுக்கிறார்.

நித்ய கன்யகா(முதிர் கன்னி)

கடைசியாக, ஒரு நடுத்தர வர்க்கப் பெண் (நந்திதா தாஸ்) பற்றியது. அவரது தாய் , ஒரு மூத்த சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் அடங்கிய குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்.  நந்திதாவை பெண் பார்க்க வரும் மணமகன் அவளது இளைய தங்கையை  விரும்புவதாகக் கூறி திருமணம் செய்து கொண்டு போகிறார்.

ஆண்டுகள் செல்ல செல்ல, மூத்த சகோதரனும் திருமணம் செய்து கொள்கிறான்.  பின்பு இளைய சகோதரியும் திருமணம் செய்து கொண்டு போக, தன் தாய் இறந்தவுடன், தங்கையின் குடும்பத்துடன் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறாள்.
அங்கு தங்கை குழந்தைகளை கவனித்துக்கொண்டு வாழ்க்கை சுமூகமாக போய் கொண்டு இருக்க , தங்கைக்கு அக்கா மேல் சந்தேகவும் பொறாமையும் பீடித்துக் கொள்கிறது. மனம் நொந்த நந்திதா தனியாக தனது வீட்டில் வாழ முடிவு எடுக்கிறார்.  தனிமையில் கள்ள உறவிற்கு ஒருவன் அழைக்கிறான்.  இறுதியாக தனது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மற்றவர்களின் விருப்பங்களை உடைத்து, சொந்தமாக வாழ முடிவு செய்தாள்.

இந்த படம் செப்டம்பர், 2007 இல் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா, 51 வது லண்டன் திரைப்பட விழா,வியன்னா திரைப்பட விழா, சியாட்டில் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. . இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட விழாக்களில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளன.

மியாமி சர்வதேச திரைப்பட விழா அடூர் கோபாலகிருஷ்ணனின் நாலு பெண்ணுங்களைத் தேர்ந்தெடுத்தது.

 

Leave A Reply

Your email address will not be published.