சாரதி அனுமதிப்பத்திர தனியார் மூலமான செயன்முறை பரீட்சை இரத்து

தனியார் பிரிவுக்கு சாரதி அனுமதிப்பத்திர செயன்முறை பரீட்சைகளை மேற்கொள்வதற்கான நடைமுறை இரத்து செய்யப்பட்டுள்ளன.

முந்தைய அரசாங்கத்தினால் கடந்த 2017 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அனுமதி, தற்போதைய அமைச்சரவையினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Comments are closed.