யாழில் 24 பேர் உட்பட வடக்கில் இன்று 33 பேருக்கு கொரோனா.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று 33 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 605 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய யாழ். மாவட்டத்தில் 24 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 03 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 03 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.