3 திருமணம்.. வரதட்சணை பணத்தில் ஜாலி வாழ்க்கை – வங்கி பணியாளரை கம்பி எண்ண வைத்த முதல் மனைவி

பெண்களை கவர்வதில் கில்லாடியாக இருந்த தனியார் வங்கி பணியாளர் பாலசுப்பிரமணி பெற்றோர் உதவியுடன் 3 திருமணங்கள் செய்து நகை மற்றும் பணம் பறித்து ஜாலியாக சுற்றி வந்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வாழைக்கொம்பு , பகுதியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகள் ஜோதி முருகேஸ்வரி. இவர் கடந்த 28-ம் தேதி, கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், “தனக்கு கடந்த 30.01.2012 ம் தேதி கரூர் மாவட்டம் வெங்கமேடு VVG நகரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாலசுப்பரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு தன் கணவர் மற்றும் அவரின் பெற்றோருடன் மேற்படி முகவரியில் வசித்து வந்தேன். பிரசவத்திற்காக தாயார் வீட்டிற்கு சென்று விட்டடேன். எனக்கு 2013-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் 3 மாதங்கள் கழித்து கரூர் வந்த போது எனது கணவர் பாலசுப்பரமணி, நித்யா என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தது தெரிய வந்தது.

Also Read: மொட்டை கடிதத்தால் மாட்டிக்கொண்ட போலி பெண் வழக்கறிஞர் – ஷாக்கான பார் கவுன்சில்

இதுகுறித்து கணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் கேட்டபோது அவன் அப்படித்தான இருப்பான் என்று சொல்லி துன்புறுத்தினர். இதனையடுத்து எனது பெற்றோர் வீட்டிற்கு மீண்டும் சென்றுவிட்டேன்.

அதன் பின்பு நித்யாவை எனக்கு தெரியாமலும் , என்னிடம் இருந்து விவாகரத்து பெறாமலும் எனது கணவர் பாலசுப்பரமணி அவரின் பெற்றோர் மற்றும் சகோதரிகளின் உதவியுடன் கடந்த 2017 நவம்பரில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு நித்யாவுக்கு தெரியாமல் சுதா என்ற பெண்ணை கடந்த 2020 ஜனவரியில் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதாக’ கூறியுள்ளார்.

Also Read: சீரியல் பார்த்த படி இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞர்: வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு

ஜோதி முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் பாலசுப்பரமணி, அவரின் பெற்றோர்கள் மற்றும் அவரின் இரண்டாவது மனைவி நித்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.இந்நிலையில் கடந்த 29- ம் தேதி பாலசுப்பிரமணியை கைது செய்த போலீஸார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

முதல் மனைவி ஜோதி முருகேஸ்வரி , கணவர் மற்றும் பெற்றோர்கள் மீது கொடுத்த புகாரில் விசாரித்தபோது, கணவர் பாலசுப்பிரமணி தமது பெற்றோர்கள், பணம் மற்றும் நகைகளுக்கு ஆசைப்பட்டு மூன்று திருமணங்கள் நடத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் பாலசுப்பிரமணி பெண்களை கவர்வதில் கில்லாடியாக இருந்துள்ளார். முதல் மனைவியை திருமணம் செய்துகொண்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் வரதட்சணையாக கொடுத்த பணத்தை வைத்து ஜாலியாக சுற்றி வந்துள்ளார்.

மீண்டும் முதல் மனைவியிடம் பணம் நகை கேட்டபோது கிடைக்காததால் அந்த பெண்ணை கழற்றிவிட்டு, தான் பணி புரியும் தனியார் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக இருந்த நித்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்தப் பெண் கொடுத்த நகை மற்றும் வரதட்சணையை வைத்து வாழ்க்கையை ஜாலியாக நடத்தியுள்ளார்.

அந்தப் பெண்ணிடம் இனி பணம் நகை இல்லை என்று தெரிந்து கொண்டு வாழ்க்கைப் போர் அடித்ததால் அதன் பிறகு மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது. இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் இருந்து கொண்டு மூன்று திருமணங்களை செய்து வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவரை கைது செய்த போலீசார், ஏமாற்றிய கணவரின் பெற்றோர்கள் மற்றும் இரண்டாவது மனைவியைத் தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன் ( கரூர்)

Leave A Reply

Your email address will not be published.