வார இறுதி நாட்களில், மேலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா?

கோவிட் வைரஸ் பரவுவதை தடுக்க, வார இறுதி நாட்களில், மேலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கும், கோவிட் நோயை தடுப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவுக்கும் இடையே இன்று காலை மற்றொரு முக்கியமான சந்திப்பு நடைபெற உள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், சுகாதார சேவைகள் இயக்குநர் மற்றும் பல வல்லுநர்கள் பங்கேற்புடன், தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான அடுத்தகட்ட முடிவுகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.