யாழில் கொரோனாத் தொற்றால் இன்றும் ஐவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்புத்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரும், புத்தூரைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கோண்டாவிலைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் என 5 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 176ஆக உயர்வடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.