பருத்தித்துறையில் இன்று 5 பேருக்குக் கொரோனா!

யாழ்., பருத்தித்துறை – பழவத்தைப் பகுதியில் இன்று 5 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவு தகவல்கள் தெரிவித்தன.

குறித்த கிராமத்தில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகளுடன் சிலர் காணப்பட்ட நிலையில் கிராம மக்கள் சுகாதாரப் பிரிவுக்குத் தகவல் வழங்கியிருந்தனர். இதனடிப்படையில் இன்று காலை சுகாதாரப் பிரிவினர் அன்டிஜன் பரிசோதனை நடத்தியிருந்தனர்.

இதன்போது 5 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவுத் தகவல்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.