மாகாணங்களுக்கிடையிலான தடையால் ரயில் சேவைகள் 64 ஆக மட்டுப்படுத்தல்!

மாகாணங்களுக்கிடையில் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் சேவைகள் 64 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் திணைக்களப் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள், அம்பேபுஸ்ஸ வரையில் பயணிக்கவுள்ளன.

புத்தளம் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் கொச்சிக்கடை வரையிலும், கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் அளுத்கம வரையிலும் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்றும் ரயில் திணைக்களப் பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.