தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 253 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை, முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியைப் பேணாமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் மேலும் 253 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த வருடம் ஒக்டோர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 54 ஆயிரத்து 612 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.