இலங்கையில் 7 ரயில் நிலையங்களுக்குப் பூட்டு! – ரயில் நிலைய ஊழியர்கள் 102 பேருக்குக் கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதையடுத்து இதுவரை 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய ரயில் நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

ரயில் நிலைய அதிபர்கள் 38 பேர், கட்டுப்பாட்டாளர்கள் 12 பேர், கனிஷ்ட ஊழியர்கள் 52 பேர் என 102 கொரோனாத்  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.