தடுப்பூசியை செயலிழக்கச்செய்யும் புதிய வைரஸ் இலங்கையில் உருவாகும்! இறுதியில் ஏற்படப்போகும் ஆபத்து

இலங்கையில் இந்த ஆண்டின் இறுதியில் தற்போதைய தடுப்பூசியை செயலிழக்கச்செய்யும், கொரோனா வைரஸின் புதிய கடுமையான திரிபு உருவாகும் ஆபத்து காணப்படுகின்றது.

புதிய கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஒரு ஆபத்தான அச்சுறுத்தலை நாங்கள் எதிர்கொள்கிறோம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு கொரோனா தொற்றுநோயின் 4 வது அபாய நிலையில் இருப்பதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனால் பெர்னாண்டோ வலியுறுத்துகிறார்.

இதேவேளை, சமுதாயத்தில் மக்களின் நடமாட்டத்தை 80-90 சதவிகிதம் குறைக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.

அத்துடன், பல்வேறு வகையான வைரஸ்களை அடையாளம் காண சுகாதார அமைச்சின் ஆய்வகங்களில் தேவையான வசதிகளை நிறுவுதல் மற்றும், மாதிரிகளை தொடர்ந்து சோதிப்பது முக்கியம் என்றும் அவர் கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.