புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு – இன்று முதல் மூடப்படும் இடங்கள்!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி,

* ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும். ஆனால் வேலைக்காக அல்லது சுகாதார வசதியை பெற்றுக் கொள்வதற்காக வெளியே செல்லும் போது இது பொருந்தாது.

– வீட்டில் இருந்து வெளியேற ஒருவருக்கு மாத்திரம் அனுமதி
– மத தலங்களில் கூட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை
– பூங்காக்கள், விளையாட்டரங்குகள் உள்ளிட்டவற்றிற்கு பூட்டு

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஓகஸ்ட் 16 முதல் அமுலுக்கு வரும் வகையிலும், ஓகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

  • வீட்டிலிருந்து வெளியேற: ஒருவருக்கு மாத்திரம் அனுமதி (கடமைக்கு செல்லல், சுகாதார சேவைகளை பெற இது பொருந்தாது)
  • பொது போக்குவரத்து: பஸ், புகையிரதங்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய, மாகாண எல்லைக்குள்
  • தனியார் வாடகை வாகனங்கள்: கார், முச்சக்கர வண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய, மாகாண எல்லைக்குள்
  • மின்சாரம், நீர் உள்ளிட்ட பயன்பாட்டு சேவைகள்: அவசியமான குறைந்தபட்ச ஊழியர்களுடன் மேற்கொள்ள அனுமதி, முடிந்தளவில் வீட்டிலிருந்து பணியாற்ற ஆவணை செய்தல்
  • அரச/ தனியார் அலுவலகங்கள்: நிறுவன தலைவரின் முடிவுக்கு அமைய குறைந்தபட்ச ஊழியர்கள். வெளி மாகாண ஊழியர்களைப்பது, தலைவரின் முடிவின் அடிப்படையிலானது
  • கூட்டங்கள்/ கருத்தரங்குகள்: அனுமதி கிடையாது
  • மத தலங்கள்: கூட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை
  • பொருளாதார மத்திய நிலையங்கள்: மொத்த விற்பனைக்கு மாத்திரம் அனுமதி
  • பல்பொருள் அங்காடிகள்: ஒரே தடவையில் 25% கொள்ளவின் அடிப்படையில் நுகர்வோருக்கு  அனுமதி. (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)
  • வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் : ஒரே தடவையில் 10% கொள்ளவின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு  அனுமதி. (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)
  • ஆடையகங்கள்: திறப்பு
  • விவசாய அடிப்படையிலான விடயங்கள்: இறுக்கமான சுகாதார வழிகாட்டலுடன் அனுமதி
  • பல சரக்கு கடைகள்: ஒரே தடவையில் உச்சபட்சம் 10 பேருக்கு அனுமதி (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)
  • திறந்த சந்தைகள்: ஒரே தடவையில் 25% கொள்ளவு இடவசதியின் அடிப்படையில் நுகர்வோருக்கு  அனுமதி. (உள்ளூராட்சி சபைகளின் இறுக்கமான கண்காணிப்பின் கீழ்)
  • பேக்கரி/ சிகை அலங்கார நிலையங்கள்/ இலத்திரனியல், மின்சார/ தளபாட/ போட்டோ பிரதி நிலையங்கள்: ஒரே தடவையில் 25% கொள்ளவின் அடிப்படையில் நுகர்வோருக்கு  அனுமதி. (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)
  • கைதிகளை பார்வையிடல்: அனுமதி இல்லை
  • குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள்: 2 வாரங்களுக்கு பூட்டு
  • திருமண வைபவங்கள்: ஓகஸ்ட் 17 வரை அனுமதியில்லை
  • மரண வீடுகள்: 24 மணித்தியாலங்களுக்குள்/ உச்சபட்சம் ஒரே தடவையில் 25 பேருக்கு அனுமதி
  • நிகழ்வுகள்/ வைபவங்கள்/ கழியாட்டங்கள்: அனுமதியில்லை
  • தங்குமிட வீடுகள்: முழுமையாக பயன்படுத்தலாம்/ புதிய நபர்களுக்கு அனுமதியில்லை
  • உடற்பயிற்சி/ உள்ளக விளையாட்டரங்குகள்: ஓகஸ்ட் 18 முதல் பூட்டு
  • சிறுவர் பூங்காக்கள்/உடல் பிடித்து விடும் நிலையங்கள்/ நீச்சல் தடாகங்கள்: ஓகஸ்ட் 18 முதல் பூட்டு
  • நடை பாதைகள்: தனித்தனியாக நடப்பதற்கு அனுமதி
  • கடற்கரை: ஒன்றுகூட அனுமதியில்லை
  • உணவகங்கள்: 50% ஆசனங்களில் அமர்ந்து உண்ண அனுமதி
  • ஹோட்டல்/ ஓய்வு இல்லங்கள்/ தங்குமிட இல்லங்கள்: 25% கொள்ளளவின் அடிப்படையில் திறக்க அனுமதி
  • பல் வர்த்தக நிலைய கட்டடத் தொகுதிகள் (Shopping Malls): 25% கொள்ளளவின் அடிப்படையில் திறக்க அனுமதி* (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்) *(சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் திருத்தப்பட்டுள்ளது)

Leave A Reply

Your email address will not be published.