நாட்டை முழுமையாக மூடிவைத்து கோவிட் தொற்றை கட்டுப்படுத்திவிட முடியாதென்கின்ற உலக நாடுகளின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர்

தற்போது நாடு முழுவதிலும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் என தாம் நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.

நாட்டை முழுமையாக மூடிவைத்து கோவிட் தொற்றை கட்டுப்படுத்திவிட முடியாதென்கின்ற நிலைப்பாட்டில் உலக நாடுகள் இருப்பதாக கூறிய அமைச்சர் , அதனையே தாங்களும் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடந்த 20ஆம் திகித முதல் வருகின்ற 30ஆம் திகதி அமுலில் உள்ள போதிலும், கொழும்பு நகரில் வழமைபோல சில இடங்களில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் சிறிய கடைகள் முதல் பல்வேறு வணிக நிலையங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை மீறுகின்ற வகையிலான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.