வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு வந்த 39 பேருக்கு கொரோனா!

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக இன்று வந்த 39 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்த 194 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜின் பரிசோதனையில் 39 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் செல்ட்டன் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் 46 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 24 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.