யாழ். போதனா வைத்தியசாலையில் மூவர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், கொடிகாமத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூவரினதும் சடலங்களையும் சுகாதார விதிமுறைகளுக்கமைய மின் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.