தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 625 பேர் கைது!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 625 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 62 ஆயிரத்து 710 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று மேல்மாகாணத்துக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகளில், 858 வாகனங்களில் பயணித்த 1,410 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.